shadow

திருச்சி எம்பியை அவதூறாக பேசியதாக செந்தில் மீது வழக்குப்பதிவு: கைதாவாரா?

சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் திருச்சி எம்பி குமார் அவர்களை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்த எம்பி குமார், உடனடியாக செந்தில் பேட்டியின் வீடியோவை பார்த்தபின்னர் தற்போது காவல்துறையில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தன்னை அவதூறாக பேசிய செந்திலையும், அதற்கு தூண்டுதலாக இருந்த டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார் தினகரன், மற்றும் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply