திமுக போராட்டத்தை மறக்கடிக்கவே ப.சிதம்பரம் கைது: சுப வீரபாண்டியன்
ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை என சுபவீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுப வீரபாண்டியனின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. நாளை டெல்லியில் திமுக காஷ்மீர் பிரச்சனனக்காக போராட்டம் நடத்தவுள்ள நிலையில் இதுகுறித்து எந்த செய்தியும் இன்று ஊடகங்களில் வராமல் காலை முதல் ப.சிதம்பரம் செய்திகளுக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை! #PChidambaram #DMK #Kashmir
— SubaVeerapandian (@Suba_Vee) August 21, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.