அமைச்சர் ஜெயக்குமார்

திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, ‘நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது என்று கூறினார்.

மேலும் துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது என்ற அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்றும் தெரிவித்தார்

மேலும் ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply