shadow

தாவூத் இப்ராஹிம் மனைவி மும்பைக்கு வந்தாரா?

சமீபத்தில் மும்பையில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் கைது செய்யப்பட்ட நிலையில், தாவூத் இப்ராஹிம் மனைவியும் மும்பை வந்திருந்ததாகவும், ஆனால் அவரை கைது செய்யாதது ஏன்? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், ரன் தீப் சிங் சுர்ஜோவாலா கூறியதாவது : ஒரு பயங்கரவாதியும், இந்தியா தேடும் குற்றவாளியுமான தாவூத் இப்ராஹிமின் மனைவி ஜூபினா ஜரின் மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றது மகாராஷ்டிரா அரசுக்கும் தெரியவில்லை, மத்திய அரசுக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும். நம் புலனாய்வு அமைப்பு தோல்வியடைந்துவிட்டதையே இது காட்டுகின்றது என காங்கிரஸ் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply