தாய்லாந்து குகை: அனைவரையும் பத்திரமாக மீட்டு உலக சாதனை
உலகில் குகை மற்றும் ஆபத்துகளில் சிக்கிய அனைவரையும் சுமார் 20 நாட்கள் கழித்து உயிர்ச்சேதம் எதுவும் இன்றி அனைவரையும் பத்திரமாக மீட்டு தாய்லாந்து மீட்புக்குழுவினர் உலக சாதனை செய்துள்ளனர்.
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின
கடும் சவால்களுக்கு இடையே மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் என மொத்தம்13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு உயிர்ச்சேதமும் இன்றி இத்தனை நாட்கள் ஆபத்தில் சிக்கியவர்களை இதுவரை மீட்டதில்லை என்பதால் இதுவொரு உலக சாதனையாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.