shadow

தவறு செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது சரியா? ஸ்ரீரெட்டிக்கு பிரபல நடிகை கேள்வி

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். இதில் வில்லன் நடிகர் சாம் பாலும் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகை பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளும், துன்புறுத்தலும் இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது.

திரைத்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஒரு தவறை செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல.

Leave a Reply