தர்பார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறிய பதிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முந்தைய திரைப்படமான சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திர்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் உள்பட பலர் குறித்து அந்த படம் ஓடும் தியேட்டர் முன் போராட்டம் நடத்தினர்

இதனை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய அடுத்த படமான தர்பார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் அந்த படத்திற்கு ஆதரவான கருத்தை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

இந்த படத்தில் ’பணம் இருந்தால் சிறை கைதிகள் கூட வெளியே சென்று ஷாப்பிங் செல்லலாம்’ என்ற ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ’தர்பார் படத்தில் இடம்பெற்ற வசனம் சரியானதுதான் என்று அவர் கூறியுள்ளார்

சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வகையில் உள்ள ஒரு வசனத்தை சரியானது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply