தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளை ஆன கெளதம் கார்த்திக் !
கெளதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘தேவராட்டம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையில் எட்டியதோடு விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் கெளதம் கார்த்திக் அடுத்த படத்திற்கு கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் பெயர் ‘செல்ல பிள்ளை’ என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் செல்ல பிள்ளையாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை அருண் சந்திரன் இயக்க உள்ளார். சூரி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.