shadow

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொழி பெயர்ப்பு தவறாக இருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கருணை மதிப்பெண் வழங்கி 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் பல தமிழக மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply