shadow

தமிழிசை, மு.க.ஸ்டாலின் வார்த்தை போர்: சரமாரியாக வரும் பஞ்ச் டயலாக்குகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகிய இருவரும் இணையத்தின் வழியே வார்த்தை போர் செய்து கொண்டிருப்பதை மற்ற கட்சியினர் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புல் முளைக்க கூட தண்ணீரில்லை, எப்படி தாமரை மலரும் என பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த தமிழிசை செளந்திரராஜன், இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று கூறினார்.

தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின், ‘சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்! என்று கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி பஞ்ச் டயலாக்குகள் மூலம் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளது மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு கிடைத்த வாய்ப்பாக உள்ளது,

 

Leave a Reply