தமிழிசை தலைமையில் பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம்
பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் சற்றுமுன் சென்னை கமலாலயத்தில் தொடங்கியது. இந்த உயர்நிலை கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் திருவாரூர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இம்மாத இறுதியில் பிரதமர் மோடியின் தமிழக வருகை ஆகியவை தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது
இந்த உயர்நிலை கூட்டம் முடிந்த பின்னர் திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக நிலைமை வெளிப்படும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.