தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? – துரைமுருகன் ஆவேசம்
திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
எச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, எச்.ராஜா ஒரு நாகரீகமற்ற அரசியல்வாதி என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.
டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுனர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியதற்கு அருகில் இருந்த பா.ஜனதா தொண்டர்கள் ஆட்டோ ஒட்டுனரை தாக்கினர்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்போதும் அவர் குழந்தையாகவே உள்ளார். தாக்குவதும், கைது செய்வதும் இந்த ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.
கேள்வி கேட்பவர்களை தாக்குவதா? அவர் என்ன எலிசபெத் ராணியா என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.