தமிழக முதல்வரை சந்தித்த திருமாவளவன்: ஏன் தெரியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக, விடுதலைச்சிறுத்தை கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்குமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திருமாவளவன் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதி திருமாவளவன் வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் எதுவும் பேசவில்லை என்றே கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.