தமிழக அரசு அனுமதித்தால் இலவசமாக பாடம் நடத்த தயார்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உதவியோடு ஒருசில பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு அனுமதித்தால் தமிழக பா.ஜ.க இளைஞரணி தொண்டர்கள் இலவசமாக மாணவர்களுக்கு பாடம் நடத்த தயார் என்றும் தமிழக அரசு அனுமதிக்காக இளைஞரணியினர் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தமிழக பா.ஜ.க இளைஞரணி அறிவித்துள்ளது.
தமிழக பா.ஜ.க இளைஞரணி தொண்டர்கள் பள்ளியில் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.