சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது அறிக்கைக்கு ஒருசில அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்

இந்த நிலையில் சூர்யா தற்போது தமிழக அரசின் நடவடிக்கை ஒன்றுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்து அதற்கான மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றினார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…

Leave a Reply