shadow

தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.வி.சண்முகம், அப்பல்லோ, நெஞ்சு வலி, மருத்துவர்கள்

Leave a Reply