தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டிய சித்தராமையா

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

தமிழகத்தில் அரசுக்கு அளித்த ஆதரவை 18 எம்.எல்.ஏக்கள் விலக்கி கொண்டு ஆளுநரிடம் கடிதம் அளித்ததும், சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். பணம் மற்றும் அமைச்சர் பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவதை தடுக்க வேண்டும்’ என தமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேசினார்

Leave a Reply