தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டமா? தமிழிசை ஆதங்கம்
தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என ஆரம்பிப்பது நல்லதல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இன்று தூத்துகுடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ‘அணுக்கழிவு மையம் குறித்து தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகின்றன என்றும், எதற்கெடுத்தாலும் போராட்டம் என ஆரம்பிப்பது நல்லதல்ல என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினாலே குடிநீர் பஞ்சம் தீரும் என்றும், தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் – திமுக செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.