shadow

தனித்து போட்டியா? கூட்டணியா? மர்மம் விலகாத ‘மய்யம்’ கமல்

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா?, கூட்டணி அமைத்து போட்டியா? என்பதை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. அவரே இதுகுறித்து குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

ஒருபக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை தொண்டர்களிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் வாங்கத் தொடங்கினாலும் இன்னொரு பக்கம் ஒருசில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது

தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சியின் கூறியபோது எங்கள் கட்சியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றாலும், பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு மெச்சத் தகுந்த அளவில் வாக்கு சதவீதத்தை பெறுவோம். கூட்டணி அமைத்தே இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டணி குறித்து ஆச்சரியமான தகவல் விரைவில் வெளியாகும்” என்று கூறினர்

Leave a Reply