முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் கேரள முதல்வருக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம் என கேரள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை என்றும், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன்
விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளரிடம் இருந்து ஐ.டி. செயலாளர் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply