டெல்லி திகார் சிறையில் சோனியா காந்தி: யாரை சந்திக்க சென்றார்?

காங்கிரஸ் பிரமுகர்கள் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் இன்று சோனியா காந்தி சென்றார். அவர் அங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்தார். இருவரும் சில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாக தெரிகிறது

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சிவக்குமார் கைதாகி டெல்லி திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply