டெல்லியில் நாளை காவேரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

டெல்லியில் நாளை காவேரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த கூட்டட்தில் பங்கேற்கவுள்ளனர். மேலும் வருகிற 28ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

காவிரியில் தண்ணீர் திறக்க இது சரியான தருணம் அல்ல என்றும் இங்கேயே மழை இல்லை. மழை பெய்தால் தண்ணீர் திறப்பதை பற்றி பார்ப்போம் என்றும் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் கூறியிருந்த நிலையில் டெல்லியில் நாளை காவேரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply