டிராபிக் போலீஸ் அதிரடியால் 61 ஆயிரம் லைசென்ஸ்கள் ரத்து?
சென்னையில் பல்வேறு காரணங்களால் சுமார் 61ஆயிரம் வாகன ஓட்டிகளின் லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல், அதிவேகம், சிக்னலை மதிக்காமல் செல்வது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 61.504 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இவர்களில் சுமார் 2917 பேர் அதிவேகமாக சென்றவர்கள் என்றும், 29032 பேர் சிக்னலை மதிக்காமல் வண்டி ஓட்டியவர்கள் என்றும், 10651 பேர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியவர்கள் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.