டிரம்ப் என்னை கற்பழித்த பின்னர் யாருடனும் உறவு கொள்ளவில்லை: 72 வயது பெண் திடுக் தகவல்

அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் மீது ஏற்கனவே அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப்பி உள்ளார். 75 வயது ஜீன் கேரல் என்ற அந்த பெண் எழுத்தாளர் ‘நியூயார்க்’ பத்திரிகையில் இதுகுறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:

டிரம்ப் அப்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்து வந்தார். அவரை நான் மேன்ஹாட்டன் நகரில் பெர்க்டார்ப் குட்மேன் சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்தேன்.

அப்போது எனக்கு வயது 52. டிரம்புக்கு வயது 50 இருக்கும். அவர் என்னிடம், எனது சினேகிதிக்காக நான் ஒரு பரிசு வாங்க வந்திருக்கிறேன். என்ன பரிசு வாங்கலாம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். பின்னர் அவர் ஒரு இளஞ்சிவப்பும், சாம்பல் நிறமும் கலந்த உடையை (பாடி சூட்) தேர்ந்தெடுத்து வாங்கினார். அந்த உடையை நான் அணிந்து காட்டுமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

நாங்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்றோம். அங்கு டிரம்ப் என் மீது பாய்ந்தார். அடுத்த 3 நிமிடங்களில் அவர் என்னை பலாத்காரம் செய்தார். அவர் என் இரு கைகளையும் பற்றி, இரண்டாவது முறையும் சுவர் மீது தள்ளி என்னை கற்பழித்தார்.

இதுபற்றி நான் எனது நண்பர்கள் 2 பேரிடம் கூறினேன். அவர்கள் போலீசில் புகார் செய்யுமாறு ஆலோசனை சொன்னார்கள். இன்னொருவரோ, இதை இத்துடன் விட்டு விடுங்கள். யாரிடம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். டிரம்ப் 200 வக்கீல்களை வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை கொன்று புதைத்து விடுவார் என்றார்.

டிரம்ப் தான் நான் சந்தித்த கடைசி அருவருப்பான மனிதர். அந்த சம்பவத்துக்கு பின்னர் என் வாழ்நாளில் நான் யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டது இல்லை.

இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

Leave a Reply