டிஎன்பிஎல் கிரிக்கெட்: கோப்பையை வென்றது சேப்பாக் அணி

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 126/8 20 ஓவர்கள்

சசிதேவ்: 44 ரன்கள்
எம்.அஸ்வின்: 28 ரன்கள்
காந்தி: 22 ரன்கள்
சுஷில்: 21 ரன்கள்

திண்டுக்கல் டிராகன்ஸ்: 114/9 20 ஓவர்கள்

சுமந்த் ஜெயின்: 46
விவேக்: 23
அபினவ்: 21

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை சேப்பாக் அணியின் பெரியசாமி பெற்றார். அவர் இந்த தொடரில் 21 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply