சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ்  கட்சியை  பலப்படுத்த திட்டமிட்டள்ளது.இதன் முதல் படியாக தமிழகத்தை சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஜெயந்தி நடராஜன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜெயந்தி நடராஜன் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply