இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கேதார் ஜாதவ்வை களமிறக்கியது மிகப் பெரிய தவறு என்பதை தோனி உணரும் வகையில் ஜாதவ் சொதப்பலான ஆட்டத்தை கொடுத்துள்ளார் \

கேதார் ஜாதவ் களத்தில் இறங்கும்போது சென்னை அணி 21 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது

ஆனால் கேதார் ஜாதவ் 12 பந்துகளை அடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

அதாவது சராசரியாக ஒரு பந்தில் 2 ரன்கள் ஜாதவ் அடித்து இருந்தால் கூட இந்த போட்டியில் மிக எளிதில் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும். அவருடைய பொறுப்பற்ற மிக மோசமான ஆட்டத்தால் சென்னை அணி இன்று 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இவ்வளவு மோசமாக விளையாடும் ஒரு ஆட்டக்காரருக்கு தொடர்ந்து தோனி வாய்ப்பு கொடுத்து வருவது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்பதுதான் சென்னை அணியின் ரசிகர்களுக்கு கேள்வியாக உள்ளது

Leave a Reply