shadow

சோமனூர் பேருந்து நிலையம் துயரம் எதிரொலி: முட்டுக்கொடுக்கும் பணிகள் தொடக்கம்

கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூர் பேருந்து நிலையில் திடீரென இடிந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் பேருந்து நிலையங்களுக்கு முட்டுக்கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சோமனூர் பேருந்து நிலையத்தின் கூரைப்பகுதியை முட்டுக்கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இடிந்துகிடந்த பகுதிகளில் சிமென்ட் கலவை பூசி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்த போதிலும் இன்னும் பொதுமக்களுக்கு அச்சம் தீரவில்லை.

பேருந்து நிலையம் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளபோதிலும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை என்றும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் சோமனூர் போன்று பல பேருந்து நிலையங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply