shadow

சோபியா வெளிநாடு செல்லலாம்: காவல்துறை அறிவிப்பு

தமிழிசை முன் பாஸிச பாஜக ஒழிக என கோஷமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சோபியா என்ற மாணவி வெளிநாடு செல்ல தடை ஏதும் இல்லை என புதுக்கோட்டை காவல்துறை அறிவித்துள்ளது.

சோபியா விவகாரம் குறித்து புதுகோட்டை காவல்துறை ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான புதுகோட்டை காவல்துறை ஆய்வாளர் திருமைலை கூறுகையில் ’சோபியா வெளிநாடு செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை’ என்று கூறினார். இதனால் சோபியா இன்னும் ஓரிரு நாட்களில் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழிசை மீது சோபியா கொடுத்த புகார் மனுமீது விசாரணையை போலீசார் நடத்தாததால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யவுள்ளதால சோபியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply