சோபியா விவகாரம் கமல்ஹாசன் பதிவு செய்த டுவீட்
தமிழிசை முன் மாணவி சோபியா பறக்கும் விமானத்தில் முழங்கிய பாஜகவிற்கு எதிரான கோஷம், சில மணி நேரங்களில் உலக அளவில் டிரெண்டாகிவிட்டது. இதனால் பாஜகவின் மானம் விமானத்தில் பறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழிசையின் மெச்சூரிட்டி இல்லாத இந்த செயலை திமுக உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து வரும் நிலையில் சமீபத்தில் கட்சி ஆரம்பித்து நானும் அரசியல்வாதிதான் என அடிக்கடி தானே சொல்லிக்கொண்டிருக்கும் கமல்ஹாசனும் இந்த விஷயம் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முதல்முறையாக எல்லோருக்கும் புரியும் வகையில் அவர் பதிவு செய்த டுடீட் இதோ:
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.