சோபியாவின் டுவிட்டர் பக்கத்திற்கு என்ன ஆச்சு?
தமிழக பாஜக தலைவருடன் விமானத்தில் வாக்குவாதம் செய்த மாணவி சோபியா ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்டார். ஒருபக்கம் அவரை வீரத்தமிழச்சி, வீரமங்கை என நெட்டிசன்கள் வாழ்த்தி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாஜகவினர் அவரை தீவிரவாதி, விடுதலைப்புலி போன்ற முத்திரைகளை குத்த முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோபியாவின் டுவிட்டர் பக்கமான @Red_Pastures என்ற டுவிட்டர் பக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை ஃபாலோ செய்பவர்கள் மட்டுமே அவரது டுவிட்டுக்களை பார்க்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள்ளது.. சோபியா மீது ஒருசிலர் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு வருவதால் அவரது எதிர்காலம் கருதி அவரது பெற்றோர்கள் அந்த டுவிட்டர் கணக்கில் இந்த மாற்றத்தை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.