சோதனை மேல் சோதனையை சந்திக்கும் ‘ரஜினிமுருகன்”
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’ படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, அந்த படத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டே இருக்கின்றது. கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி இந்த படம் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கியது. ஆனால் திடீரென டிசம்பர் 1ஆம் தேதி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 4ஆம் தேதி ரிலீஸ் ஆனவுடன் முதல் மூன்று நாள் வசூல் மூலம் சில கடன்களை அடைப்பதாக தயாரிப்பாளர் வாக்க்கு கொடுத்திருந்ததாகவும், ஆனால் அந்த வாக்கை தற்போது அவர் நிறைவேற்றாததால் மீண்டும் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.