shadow

சொகுசு கார் மோதி பேருந்துக்காக காத்திருந்த 6 பேர் பலி: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவையில் தாறுமாறாக வந்த சொகுசுக்கார் ஒன்று பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதிய விபத்தால் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கோவையில் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகாக பயணிகள் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுக்கார் ஒன்று நிலைதடுமாறி பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது.

இதனால் படுகாயம் அடைந்த 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனையடுத்து சொகுசுக்கார் டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிற பயணிகளும் அந்த பகுதி பொதுமக்களும் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் டிரைவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு கைதுசெய்தனர். இந்தவிபத்தால் அந்த பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

Leave a Reply