சொகுசு கப்பலில் தேனிலவு: நிர்வாணமான இறந்து கிடந்த காதல் ஜோடி
ஜெர்மனியை சேர்ந்த காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் வித்தியாசமாக தேனிலவை கொண்டாட சொகுசு கப்பலில் ஒரு அறையை புக் செய்திருந்தனர். இந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கும்போதே அவர்கள் தேனிலவை கொண்டாடியதாக தெரிகிறது
இந்த நிலையில் இந்த காதல் ஜோடியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் நிர்வாண நிலையில் மரணம் அடைந்திருந்தனர். இதுகுறித்து கப்பல் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் கப்பல் கரைக்கு வந்ததும் போலீசார்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த காதல் ஜோடியின் உடம்பில் எந்த காயமும் இல்லை என்றும் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். சொகுசு கப்பலில் தேனிலவு கொண்டாட வந்த காதல் தம்பதிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.