சேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் தாக்குதல்: பரபரப்பு தகவல்
சேலத்தில் இளம்பெண் மீது மர்ம நபர் ஆசிட் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே குகை என்ற பகுதியில் காயத்ரி என்பவர் மீது மர்ம மனிதர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். காயத்ரி கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர் மீது அமிலத்தை வீசியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையில் சீனிவாசன் என்பவர்தான் காயத்ரி மீது ஆசிட் வீசினார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே ஆசிடி வீசிவிட்டு தப்பிய சீனிவாசனை போலீஸ் தேடுகிறது அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.