செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்
செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார்
இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன், ‘மேலும் செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பல இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். செல்போனால்தான் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது
செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். எனவே செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என்று பேசினார். மேலும் மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.