சென்னை மாநிலக்கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வரும் மே 6ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்லூரி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுக்ள கடந்த 19ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வரும் மே 6ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் மதிப்பெண், சமூகப்பிரிவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு சேர்க்கைக்காக மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும் என்றும் மாநிலக் கல்லூரி தெரிவித்துள்ளது.

Leave a Reply