சென்னை நீதிமன்றங்களுக்கு மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு:
சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு குறித்து பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால் நீதிமன்ற ஊழியர்களுக்கு ஆபத்து என மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட முடிவெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.