சென்னை நந்தனம் அருகே சாலை விபத்து: 2 பெண்கள் பலி
சென்னையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில் இன்று நடந்த ஒரு சாலை விபத்தில் இரண்டு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
சென்னை நந்தனம் அருகே இன்று காலை ஒரு பைக்கில் மூன்று பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.