shadow

சென்னை சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் தற்கொலை

சென்னையில் பல கிளைகளாக இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் சங்கரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கரன் தனது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் உள்பட பல கிளைகளாக இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நாடு முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சங்கரன் தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply