shadow

சென்னை கே.கே.நகர் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் அவ்வப்போது சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவது தெரிந்ததே. குறிப்பாக அண்ணா சாலையில் அவ்வப்போது பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை கே.கே.நகரில் உள்ள அழகரிசாமி சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது, இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இரண்டு முறை பள்ளங்கள் உருவாகியுள்ளது என்பதும் இன்று ஏற்பட்டுள்ள பள்ளம் மூன்றாவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய சென்னைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சாலைகள் உறுதியாக உள்ளதாகவும், குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளால்தான் பள்ளம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிவது கடினம் எனவும் இருப்பினும் சாலையில் பள்ளம் ஏற்படுவது போன்ற மிக மோசமான சூழல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறினர்

Leave a Reply