சென்னை ஐஐடி மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம்: போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிக்கல்!
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை ஐஐடியில் படித்துவரும் ஜெர்மன் நாட்டின் மாணவர் ஒருவர் சமூகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய ஒரு பதாகையை கையில் வைத்திருந்தார்
உடனடியாக இது குறித்து விசாரணை நடத்திய குடியுரிமை துறை அதிகாரிகள் அந்த மாணவர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர் இதனையடுத்து அந்த மாணவர் நேற்று சென்னையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து ஜெர்மன் சென்றதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.