சென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியான ஆந்திரா வங்கியின் முன்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி கட்டிடம் அருகே ஆந்திரா வங்கி என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம்போல் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் நிறைந்து இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென இந்த வங்கி கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை

Leave a Reply