சென்னையை நோக்கி வரும் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலானது, இன்னும் இரண்டொரு நாட்களில் சென்னையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் புயல் வந்தால் சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனையும் நடத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.