shadow

சென்னையில் விடிய விடிய மழை: மக்கள் மகிழ்ச்சி

தென்னிந்தியா முழுவதிலும் தமிழகத்தின் தென் பகுதியிலும் நல்ல மழை பெய்து வந்தாலும் சென்னையை பொருத்தவரையில் மழை இல்லாமல் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நேற்றிரவு சென்னையில் நல்ல மழை பெய்ததால் சென்னை மக்கள் குளிர்ச்சியால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நேற்றிரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. விடிந்த பிறகும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழலை மக்கள் அனுபவித்தனர்.

விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டதால் குளம்போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் நிதானமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னையில் 4.1 செமீ மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply