சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் : மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபப்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதிகளிலும், விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூரிலும் அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.