பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் கட்ட ஜூலை 15ஆம் தேதி வரை அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது
மின் கட்டணத்தை நேரில் வந்து கட்ட முடியாதவர்கள் இணையதளத்தின் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இன்னும் ஒரு மாத காலம் வரை மின் கட்டணம் செலுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.