சென்னையில் பல இடங்களில் கனமழை: பள்ளிகள் விடுமுறையா?
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தரமணி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டுவிட்டு மழைபெய்து வருவதால் ஒருசில இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்,
மேலும் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தாலும் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.