சென்னையில் பரவலாக மழை: 3 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னையில் உள்ள கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர்: ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், மாங்காடு, பூவிருந்தவல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் இன்றைய கனமழை காரணமாக புதுக்கோட்டை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.