செஞ்சுரி அடிக்கப்போகிறது சென்னை விமான நிலையம்: மீண்டும் நொறுங்கி விழுந்த கண்ணாடி!

சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடி நொறுங்கி விழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் கண்ணாடி நொறுங்கி விழுந்துள்ளது

சென்னை விமான நிலையத்தில் 86வது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியதாகவும், உள்நாட்டு முனையத்தின் 4வது நுழைவு வாயிலில் மேற்கூரை பகுதியில் இருந்து கண்ணாடி விழுந்தது; அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இனிமேலாவது கண்ணாடி நொறுங்கி விழுகாத வகையில் விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செஞ்சுரி அடிக்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் விமான பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Leave a Reply